செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது
நினைவு தினம் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி
மரியாதை செலுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுராந்தகம் நகர
கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி
ஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர்
எம்.பி. சீனிவாசன்,அவைத்தலைவர் வேணு,கவுன்சிலர்கள் காதர்மொய்தீன்
பன்னீர், தங்கப்பன்,வழக்கறிஞர் ஜேம்ஸ்,உட்பட அதிமுக நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.