தஞ்சாவூர் ஸ்ரீ நேபாள மன்னர் ராஜாராம் மௌனம் குரு சுவாமிகளின் 11 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி பூஜை பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெறும் .

இவ்விழாவில் மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ நேபாள மன்னர் ராஜாராம் மௌனம் குரு சுவாமிகளுக்கு மாலை 4:30 மணிக்கு மேல் அபிஷேகங்கள் ஆரம்பம் ஆகிறது .இந்த நான்கு கால பூஜையில் கலந்துகொண்டால், மறுபிறவி இல்லை என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். இந்த இப்பிறவியிலேயே சிவபெருமான், நம்மை ஆட்கொண்டு, சிவபதம் தருவார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

கோயில் நிர்வாகி அசோக்குமார் கூறியதாவது:நேபாள மன்னர் ராஜாராம் சுவாமிகள் 11 ஆம் ஆண்டு சிவராத்திரி பூஜை விழா இரவு4 .30 முதல் 5.30 மணி வரை பூஜைகள் நடைபெறு. அப்போது சிவலிங்கத் திருமேனிக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் நடைபெறும்.”அரிசி அட்சதையால் லிங்கத்திருமேனிக்கு அலங்கரிப்பார்கள். பொன் ஆபரணங்கள் பூட்டி, வில்வத்தாலும் தாமரையாலும் அரளிப் பூக்களாலும் அர்ச்சிப்பார்கள். கற்பூரம், சந்தனாதி சேர்த்து தூப தீப ஆராதனை செய்யப்படும்.”என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *