ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலந் தழுவிய வட்டத் தலைநகரில் 14 ம் தேதி ஆர்ப்பாட்டம்…

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் 14 ம் தேதி அன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக்கல்வித் துறையில் மதுரை மாவட்டத்தில் பணி புரியும் 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சார்ந்த அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1.4.2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்:243ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.


கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டாதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலந் தழுவிய வட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம் 14 ம் தேதி அன்று மாலை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாக்ககளில் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.


தா.வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தா.வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஒன்றியங்களை சார்ந்த தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.


மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களைச் சார்ந்த தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சார்ந்த இயக்க உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.

திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி மற்றும் திருமங்கலம் ஒன்றியங்களை சார்ந்த தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.


உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் சேடப்பட்டி, செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க உள்ளனர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *