காங்கயத்தில் பிஏபி வாய்க்காலுக்கு தந்தையுடன் குளிக்க சென்று குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்தாஸ் வயது 34. இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் காங்கயம் அடுத்த படியாண்டிபாளையத்திலுள்ள தனியார் நார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை மனோஜ்தாஸ் மில்லிற்கு அருகிலுள்ள பிஏபி வாய்காலுக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது உடன் வந்திருந்த மனோஜ்தாஸின் 8 வயது குழந்தை பூஜிகுமாரி படிக்கட்டிலிருந்து தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் வாக்காலுக்குள் விழுந்த குழந்தையை மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கயம் போலிஷார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *