ராஜபாளையம், வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காத்திருக்கும் போராட்டம்! பணிகள் பாதிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இ. முத்துராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இது அலுவலக பயன்பாட்டிற்காக இந்த மண் அள்ளப்பட்டதாக தெரிகிறது. இது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும். இது குறித்து புகார் வந்ததாக கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் உள்பட 4 வருவாய் துறை அலுவலர்களையும் இரண்டு வேளாண்மை துறை, ஒரு பொதுப்பணித்துறை அதிகாரி உட்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அலுவலக பயன்பாட்டிற்கு மண் அள்ளியதற்காக இது காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக இன்று பணிகளை புறக்கணித்து காலவரையற்ற காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக வருவாய் துறை சங்கத்தினர் அறிவித்தனர்

இதன்படி, ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய்,அலுவலர் மாரியப்பன் தலைமையில் இன்று அலுவலகத்திற்கு வருகை தந்த அனைத்து அலுவலர்களும் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பின்னர் வெளியே வந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சஸ்பெண்ட் உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என எனவும் விரைவில் இதற்கு தீர்வு காணப் படாவிட்டால் மாநில அளவில் இந்த போராட்டம் நடத்தப்படும் எனவும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதனால், பொதுமக்கள்,பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *