சுமார் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வாடிவாசல் அமைத்தல், ஜல்லிக்கட்டு போட்டிக்கான களம் அமைத்தல், 5000 பார்வையாளர்கள் அமரும் வகையில் பார்வையாளர்கள் மேடை அமைத்தல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். வாடிவாசல் பார்வை யாளர்கள் அரங்கம் மருத்துவ முகாம்கள் ஆகிய இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *