திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று 6- ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, நேற்று இரவு 108 சுமங்கலிகள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று அருட்பிரசா தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான சுமங்கலிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே. நடராஜன்&சகோதரர்கள், வலங்கைமான் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.