மார்ச் 14ந் தேதி பட்ஜெட் :

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்:

2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வருகின்ற மார்ச் மாதம் 14ந்தேதி சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கியமானதை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது.

உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேரில் கலந்துரையாடிய இன்றைய முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியை அளித்தார். இது 100 நாளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுகவின் 377 வது வாக்குறுதியாக உள்ளது.

அது போல் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் என திமுக 153 வது வாக்குறுதியிலும் உள்ளது.எனவே 10 ஆண்டு என்பதையும் கடந்து, 14 ஆண்டாக தற்காலிகமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தற்போது ரூபாய் 12,500 என்ற குறைந்த சம்பளம் வழங்குவதால் வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.பகுதிநேர ஆசிரியர்களும் கோரிக்கை அனுப்பியும், போராடியும் வருகிறோம்.

மாணவர்கள் கல்வி மேம்படவும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் எதிர்காலம் நலன் கருதி, இந்த பட்ஜெட்டில் காலமுறை சம்பளம் வழங்க நிதி ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

2012 முதல் 2021 வரை திமுக வலியுறுத்திய கோரிக்கையை, இப்போது அனைத்து கட்சிகளும் திமுக அரசிடம் வலியுறுத்துகிறது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

இது தான் முழுமையான பட்ஜெட் என்பதால் இதிலே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
Cell : 9487257203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *