காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகரின் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் நுஸ்ரத் நகர் அமைந்துள்ளது இங்கு 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்லாமியர்கள் வேத பாடசாலையான மதராஸா வும் அமைந்துள்ளது இங்கு 50க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். மேலும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த புதியதாக மசூதி ஒன்றும் அமைய உள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே இதே சாலையின் அருகே இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் கடையை அகற்றி நுஸ்ரத் நகர் மற்றும் பக்தவத்சலம் நகர் என இரு தரப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது.

இந்த டாஸ்மாக் கடை அமையகூடாது என வலியுறுத்தி தமிழக அரசின் முதல்வர் பிரிவுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் மனு நாள் அன்றும் அப்பகுதி இஸ்லாமிய மக்கள் புகார் அளித்துள்ளனர்.
புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்

இன்று உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலத்திற்கு வந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வியிடம் நுஸ்ரத் நகர் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அதில் நுஸ்ரத் நகர் பக்தவத்சலம் நகர் என இரு பகுதிகளில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட மக்கள் அமைதியான முறையில் நட்புறவாக பழகி வருகிறோம் அரசின் மதுபான கடை இந்த பகுதிக்கு வந்தால் பெண்கள் , குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகவே தமிழக அரசின் மதுபான கடையை குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கட்டாயம் இங்கு மதுக்கடை வராத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *