செங்கல்பட்டு மாவட்டம் லா.எண்டத்தூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
77 வது பிறந்தநாள் விழா கழக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் பிறந்தநாள் விழாவில்
லா.எண்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் யமுனா குப்புசாமி ஏற்பாட்டில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் சோழன் முன்னிலையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அறுசுவை
உணவு பிரியாணி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ராஜேஸ்வரி ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரூபன், மனோகர், முத்து,
கிளை செயலாளர் சேகரன் வீராசாமி ஆர்.குப்புசாமி வி.குப்புசாமி மூர்த்தி
உள்ளிட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள்
பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *