மதுரை கே.கே.நகரில் உள்ள அரசு பார்வைத்திறன் குறையுடையோர் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இன்று பிப். 28-ம் தேதி உலக அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, பார்வையற்ற மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்கப் படுத்தி, வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.பி. தங்கவேல், விஷன் எம்பவர் நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜ், வைஷ்ணவி இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

விஷன் எம்பவர் தொண்டு நிறுவனம் மூலம் அறிவியல், கணிதம் பயிற்சி பெற்ற பள்ளி யின் பார்வைத் திறனற்ற மாண வர்கள் ‘நெருப்பில்லா சமையல்’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விதமான உணவுப் பொருள்களை செய்து காட்டி, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

மதுரை கே.கே.நகரில் உள்ள அரசு பார்வைத் திறன் குறையுடை யோர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புகளைப் பார்வையிட்ட அன்னை சத்யா அம்மையார் தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மதுரை கிழக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் நாக லட்சுமி, அன்னை சத்யா அம்மையார் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு வியந்து பாராட்டினர்.

முன்னதாக, அறிவியல் சோதனைகள், கணிதச் சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுக்கள், சுற்றுச் சூழலைக் காப்போம் என் தலைப்பிலான விழிப்புணர்வு நாடகம், பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *