திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஒன்றியம் நல்லமாநாயக்கன்பட்டியில் 4 ஆண்டு புனித வனத்து அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து மதுரை,சிவகங்கை, விருதுநகர்,நத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளை மாடுகளுடன் 30க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான பணிகளை திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல்,கிழக்கு தாசில்தார் மீனாதேவி,மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார்,வருவாய் ஆய்வாளர் சிவராமன்,வி.ஏ.ஓ.அரவிந்த்,புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன்,தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டனர்.


போட்டிக்கான ஏற்பாடுகளை நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் தலைவர். ராஜ்,துணைத் தலைவர் டிட்டோ,பிரான்சி சேவியர்,செயலாளர் மைக்கேல் சகாயராஜ், துணைச் செயலாளர்கள் பிரான்சிஸ் விஜிகுமார்,மரிய அந்தோணி,பொருளாளர் ஆரோக்கிய சேகர், துணைப் பொருளாளர்கள் பேட்ரிக் பாஸ்கரன், யுவன் பிரான்சிஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *