துறையூர்
திருச்சி மாவட்டம்,துறையூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் இள.அண்ணாதுரை அருணா தேவியின் இளைய மகன் அ.இளங்கோவன்- பா.ஸ்னேகா ஆகியோரின் திருமண விழா 02/03/2025 அன்று பெரம்பலூர் ரோட்டில் உள்ள சிவாலயா திருமண மஹாலில் நடைபெற்றது.இத்திருமண விழாவில் பொறி.அ.அரவிந்தன், டாக்டர் சாலை சாருமதி வரவேற்பு அளித்தனர்.
இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு மணமக்களுக்குசுயமரியாதை திருமணமத்தை நடத்தி வைத்து மலர்தூவி வாழ்த்தினார். விழாவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு,வடக்கு மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, வைரமணி, எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மேயர் அன்பழகன்,மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட,நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய ,பேரூர் கழகச் செயலாளர்கள், முன்னாள் & இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்கள், அனைத்து அணி நிர்வாகிகள், உறவினர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்