பல்லடம் அருகே லாரி டிரைவரை தாக்கி1.25 லட்சம் ரூபாய் வழிப்பறி…..
லாரி டிரைவர் சிகிச்சைக்கு அனுமதி- வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை………

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 37. லாரி ஓட்டுனராக இவர் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் இருந்து மாட்டு தீவனத்தை ஈரோடு பகுதியில் உள்ள சிவகிரி பகுதிக்கு பல்லடம் வழியாக டாரஸ் லாரியில் எடுத்து வந்துள்ளார்.

அப்போது அவர் லாரியின் பின்னால் மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மக்கும்பல் ஒன்று பல்லடம் அடுத்த வெங்கடாபுரம் அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநர் சுரேஷ் லாரியிலிருந்து கீழே இறங்கி அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாகவும் மேலும் சுரேஷ் லாரிகள் கொண்டு வந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவரிடம் இருந்து பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து லாரி ஓட்டுநர் சுரேஷ் இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு சென்ற போலீசார் சுரேஷை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் லாரியை வழிமறித்து லாரி ஓட்டுனரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *