பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் புதிய வட்டாட்சியருக்கு வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்து வாழ்த்து…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பழனிவேலு பதவி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கும்பகோணம் நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) தனி வட்டாட்சியராக பணியாற்றியவர். பாபநாசத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த செந்தில்குமார் பட்டுக்கோட்டை நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) தனி வட்டாட்சியராக பணி மாறுதலில் சென்று உள்ளார்.
புதிதாக பதவியேற்றுள்ள வட்டாட்சியர் பழனிவேலுவை வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி,முதுநிலை வரைவாளர் சுரேஷ்குமார்,சர்வேயர்கள் சுரேணுகா,அழகேசன்,விஜயலதா,பாரத், கௌதம்,ராஜா, ரஞ்சித், பாஸ்கர்,மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.