மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ள குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

 தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் நகர அண்ணா சிலை அருகே 29.03.2025 இன்று நடைப்பெற்றது. 

                       அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,  போக்குவரத்து காவலர்கள் அனைவருக்கும் நீர்மோர்,பழச்சாறு வழங்கினார்கள். மேலும் போக்குவரத்து காவலர்கள் பணியின்போது வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தலைக்கவசம்,மற்றும் கூலிங் கிளாஸ்  ஆகியவற்றை வழங்கி நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

        இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் 

.கார்த்திகேயன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *