செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணிசாமி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் தேரோட்டம் நடைபெற்றது
புதுவை வில்லியனூர் சுப்பிரமணி ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானுக்கு இன்று காலை சிறப்பு வாசனை திரவத்தினால் அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்ற இதனை தொடர்ந்து தேர் வீதி உலா நடைபெற்றது
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடத்தை பிடித்துக்கொண்டு முருகா முருகா என்று சொல்லிக்கொண்டே மாட வீதி நான்கு சாலைமுழுவது சுற்றி வந்தனர்
பக்தர்கள் அவரவர் வேண்டுதலை நிறைவேற்றினார் இதில் கோயில் நிர்வாகிகள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் சரவணன் குடும்பத்தினர் நீர்மோர் வழங்கினர் இதனைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது