வலங்கைமானில் வைத்தீஸ்வரன் கோயில் நடைப்பயண பக்தர்களுக்கு ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில், சாத்துக்குடி பழம், வாழைப்பழம், பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம் அருகில் வைத்தீஸ்வரன் கோயில் நடைப்பயண பக்தர்களுக்கு ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில், சாத்துக்குடி பழம், வாழைப்பழம், பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் எம்.எம். சண்முகவேல், பொருளாளர் வி.எஸ். குமார், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து, கோ. சண்முகசுந்தரம்யாதவ், துணை செயலாளர் வி.ஏ.வி. சூரிய மூர்த்தி, சங்க விளம்பரம் மற்றும் ஊடகப்பிரிவு செயலாளர் க. அப்பு (எ) ரத்தீஷ்பாபு, நிர்வாக குழு உறுப்பினர்கள் என். சோமு, மாடகுடி வை. சரவணன், விசலூர் கோ. சேதுராமன், ஆர்.ராஜு, வீரராகவன், என்.எஸ். கண்ணன், சங்க உறுப்பினர்கள் மணிகண்டன், சமையலர் சேகர், ஹரிகண்ணன், எஸ். அப்பு உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *