துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில்
ரூபாய் 1,19,07,918/- க்கு பருத்தி ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் 22/04/2025 அன்று விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தி.தங்கதுரை,
உரிம இட ஆய்வாளர் அ.அன்புசெல்வி,மேற்பார்வையாளர்கள் சீ.தீபிகா,சி.மோகனா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் அதிக பட்ச விலை ஒரு குவிண்டால் பருத்தி 8,119/- ரூபாய்க்கும் , மாதிரி விலை ரூபாய் 7,221/-குறைந்த பட்ச விலை ஒரு குவிண்டால் பருத்தி 6,688/- ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த ஏலத்தில் மொத்தம் 164.905/-குவிண்டால் பருத்தி 1,19,07,918/-ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

இந்த பருத்தி ஏலத்தில் பெரம்பலூர், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், நாமக்கல், விழுப்புரம்,கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 15 வியாபாரிகள் மற்றும் 500 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *