துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில்
ரூபாய் 1,19,07,918/- க்கு பருத்தி ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் 22/04/2025 அன்று விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தி.தங்கதுரை,
உரிம இட ஆய்வாளர் அ.அன்புசெல்வி,மேற்பார்வையாளர்கள் சீ.தீபிகா,சி.மோகனா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் அதிக பட்ச விலை ஒரு குவிண்டால் பருத்தி 8,119/- ரூபாய்க்கும் , மாதிரி விலை ரூபாய் 7,221/-குறைந்த பட்ச விலை ஒரு குவிண்டால் பருத்தி 6,688/- ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த ஏலத்தில் மொத்தம் 164.905/-குவிண்டால் பருத்தி 1,19,07,918/-ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
இந்த பருத்தி ஏலத்தில் பெரம்பலூர், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், நாமக்கல், விழுப்புரம்,கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 15 வியாபாரிகள் மற்றும் 500 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்