எண்ணூர் விரைவு சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே விழுந்த கண்டைனர் பெட்டி ஓட்டுனர் சிக்கிக்கொண்ட நிலையில் போக்குவரத்து போலீசார் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இன்று விடியற்காலை வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வந்த 40 அடி நீளம் கொண்ட கண்டனர் பெட்டியை டிரெயிலர் லாரியில் மதுரையைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் 39, என்பவர் மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மணலி புதுநகரில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக எண்ணூர் விரைவு சாலை வழியாக வந்து அப்போது எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் சந்திப்பில் வளைவில் திரும்பும் போது கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டு இழந்து திடீரென்று தலைக்குப்புற சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் இளஞ்செழியன் உள்ளே சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து இளஞ் செழியனை பாதுகாப்பாக மீட்டனர்.இதில் அவருக்கு கை,முதுகில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முன்பக்க கண்ணாடி உடைந்து நிலையில் லாரியும், கண்டனர் பெட்டியும் சாலையில் குறுக்கு கிடந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கண்டெய்னர் லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்கி வந்த நிலையில்

இதை அடுத்து ராட்சத கிரேன் எந்திரம் கொண்டு வரப்பட்டு கவிழ்ந்த லாரியையும் கண்டெய்னர் பெட்டியும் தூக்கி ஓரமாக நிறுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

இச் சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *