தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம்
பிரசித்திப்பெற்ற அழகர் அய்யனார் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ அழகர் அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைப்பெற்று யாகசாலையில் 4 கால யாக பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெற்றது.


அதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் அழகர் அய்யனார் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது .

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது விழாவின் ஏற்பாடுகளை தியாகசமுத்திரம் கிராமவாசிகள் ,நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *