தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உழவர் சந்தை அருகில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி,கத்தறிக்காய்,மிளகாய் உட்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும்,,பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகளின் வியாபாரம் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி,நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.அதனை கண்டித்து50-,க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வியாபாரிகள் சாலை ஓர காய்கறி கடைகளை அகற்ற விடமாட்டோம் அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்றனர்.அதற்கு போலீசார் அதிகாரிகள் 10 மணிக்கு மேல் வருவார்கள் என்று தெரிவித்தார்.அதை தொடர்ந்துசாலை மறியலை கைவிட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரத்தை தொடர்ந்தனர் .இதனால் பொள்ளாச்சி ரோட்டில் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர் சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலை ஓர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.