புதுச்சேரியிலிருந்து பெங்களுரூ செல்லும் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
புதுச்சேரியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் 80 பேர் பயணிக்கும் 2 விமான சேவைகள் இயங்கி வருகின்றன. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விமானம், இங்கிருந்து பெங்களூரு செல்லும். பின்னர் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்லும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக, கடந்த 10 நாட்களாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கான விமான சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைச்துள்ள விமான நிலையத்தில் இருந்து பகல் 1.55 மணிக்கு விமானம் புறப்பட்டு, 2.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.