மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள், கனரக வாகனங்கள் ஓட்டுனர், புதை சாக்கடை சீரமைப்பு உள்ளிட்ட பல் வேறு பணிகளுக்கு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்ப டையில் பணியாளர்களை | நியமித்து ஊதியம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும், மாநகராட்சி பணி யாளர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், புதை சாக்கடை சீரமைப்பு பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *