வலங்கைமானில் 1975-78 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள வாசு திருமண மண்டபத்தில் 1975-78 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற 05.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று விரிவடைந்த முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடத்துவது என்றும், வருகின்ற 05.09.2025 வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினத்தன்று நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை அழைத்து அவர்களை கெளரவப்படுத்தி சிறப்பு செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் கனகராஜன், சேகர், பழனிவேல், தெட்சிணாமூர்த்தி, இளங்கோவன், மாணிக்கவாசகம், சிவநேசன், குணசேகரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.