தூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவரை சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்

இதில் முக்கிய சாட்சியாக செல்வி இருப்பதால் அவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செல்விக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இந்த நிலையில் தனக்கு வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுவதால் தனக்கு ஏதாவது அரசு வேலை வேண்டும் என்று கூறி செல்வி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் வேலைவாய்ப்பு கேட்டு செல்வி கோரிக்கை மனு அளித்து சென்று உள்ளார் மூன்றாம் வகுப்பு வரை தாம் படித்துள்ளதாகவும் தன்னுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று செல்வி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *