C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 865 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் பாதிக்கப்பட்ட மிதமான மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட, கடுமையாக மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட 42 பயனாளிகளுக்கு தலா ரூ.4,800 வீதம் மொத்தம் ரூ.2.01,600 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் மகளிர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மின் மோட்டருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி நிறைவு செய்துள்ள 30 சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு தலா ரூ.5,600 வீதம் ரூ.1,68,000 மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்கள் என மொத்தம்72 பயனாளிகளுக்கு ரூ.3,69,600 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா.உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.