கோவை பிராட்வே டெக்கத்லான் மற்றும் யோவா யோகா அகாடமி இணைந்து நடத்திய இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த யோகா கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது..

இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தில் யோகா கலையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் யோவா யோகா அகாடமி மற்றும் பிராட்வே வளாகத்தில் உள்ள டெக்கத்லான் இணைந்து யோகாவில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்..

அதன் படி ஆசனங்களில் மிக கடினமான ஆசனங்களான விருட்சாசனம்,சக்கராசனம்,சிரசாசனம்,பூமாசனம் உள்ளிட்ட 26 ஆசனங்களை
26 மாணவர்கள் இணைந்து செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்..,

கோவை டெக்கத்லான் வளாகத்தில் நடைபெற்ற இதில்,சுமார் நான்கு வயதிலான சிறுவர்கள் துவங்கி 15 வயது வரையிலான மாணவ,மாணவிகள் இதில் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர்…

பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு ஆசனங்களை செய்த யோவா யோகா அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை தட்டி உற்சாக பாராட்டு தெரிவித்தனர்..

தொடர்ந்து சாதனைகள் செய்த மாணவ,மாணவிகளுக்கு நடுவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் கிருத்திகா ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவபடுத்தினர் இதில் பொன்னேகவுண்டன்புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டனர்..

இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு யோகா பயிற்சியாளர்கள் சரவணன் மற்றும் பால் பாண்டி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *