தேனி நகரில் ஓரணியில் தமிழ்நாடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க மக்கள் அனைவரையும் ஒரணியில் திரட்டும் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்

இதன் தொடர்ச்சியாக மாவட்டத் தலைநகரான தேனியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அலுவலகத்தில் ஓரணியில் தமிழ்நாடு மன்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிரச்சார இயக்கத்தை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்த போது தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் தேனி வடக்கு மாவட்ட ஐ டிவிங் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் கலைஞர் எழுதிய கருத்தோ வியம் புத்தகத்தை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *