மூன்று வயது முதல் 35 வயது வரையிலான ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள் பெற்று அசத்தல் கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 65 வது கராத்தே பட்டைய தேர்வு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தி்ல் நடைபெற்றது.

இதில் பிரவுன், பச்சை, மஞ்சள்,நீலம்,, ஆரஞ்சு,கருப்பு உள்ளிட்டவற்றில் பட்டையம் வழங்குவதற்கான தேர்வில் 3 வயது முதல் 30 வயது வரை உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் தியாகு நாகராஜ் கலந்து கொண்டு பட்டையம் பெறுவதற்கான கராத்தே போட்டியை நடத்தி வீரர்களை தேர்வு செய்தார் இதில், கட்டா, கராத்தே உள்ளிட்ட பிரிவுகளில் கருப்பு பட்டை பெற்ற தலைமை பயிற்சியாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் பட்டையங்களும் வழங்கப்பட்டது.

இதில் பல்வேறு நிலைகளில் பயிற்சி நிறைவு செய்த வீர்ர்,வீராங்கனைகளுக்கு கராத்தே பயிற்சியின் உயர்மிகு கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ண பட்டயங்கள் வழங்கப்பட்டன போட்டிகளுக்கான ஏற்பாடுகளை துணை இயக்குனர் சிவ முருகன் மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் சரவணன்,விமல்,தேவதர்ஷினி,உள்ளிட்டோர் செய்திருந்தனர்..

முன்னதாக தேர்வு நடைபெறும் வளாகத்தில் மை கராத்தே இண்டர்நேஷனல் மற்றும் டிரினிட்டி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

இதில் கராத்தே வீரர்,வீராங்கனைகள்,பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *