திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர். சரவணன் தலைமையில் நடைபெற்றது.
மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார்.
தொழில்முனைவோர் ஆவதற்கான படிநிலைகள், நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பதை தவிர்த்தல், தினசரி செய்தித்தாள் வாசித்தல், உயர்ந்த இலக்குகளைத் தீர்மானித்தல் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.