இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் சிந்தனை மன்றத்தின் சார்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌர்ணமி திருநாளினை முன்னிட்டு பசும்பொன் தேவர் திருக்கோவிலில் தரிசனம் செய்த பின்பு கமுதி தேவர் திருமண மண்டபத்தில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்
மு. ஆறுமுகம் ஏற்பாட்டில் ஆன்மீகச் சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.

கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் தலைவர் பி.செல்லத்தேவர்செயலாளர் கே.ராமமூர்த்தி பொருளாளர் கே.முத்து ஆகியோர் தலைமையிலும், மூவேந்தர் பண்பாட்டு கழகம் தலைவர் இராமையாத்தேவர் கமுதி பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந.முக்கூரான் செயலாளர் வழக்கறிஞர் சு.முத்துராமலிங்கம் பொருளாளர் கோட்டை இளங்கோவன் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆசிரியர் எம்.ஏ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்முன்னாள் மறவர் சங்க பொருளாளர்செல்லப்பாண்டியன் வருகை தந்தவர்களை வரவேற்று பேசினார்

சமீபத்தில் மறைந்த தர்மலிங்கத்தேவர்ராமச்சந்திரபூபதிசிந்தனை மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மதுரை முத்துராமலிங்கம் பெரும் கவிக்கோ சேதுராமன்திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய வலிமை ஆசிரியர் நேதாஜி வே.சுவாமிநாதன், தேவரின் வரலாற்று ஆய்வாளர் முன்னாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் வி. எஸ். நவமணி தேவரின் ஆன்மீக கருத்துக்களையும் தேவரின் வாழ்வியல் நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் (பசும்பொன்) பிரிவு பொதுச் செயலாளர்
ந. பசும்பொன் பாண்டியன் பேசும்போது பசும்பொன் தேவர் முற்றும் துறந்த ஞானி என்றும் காங்கிரஸ் பேரியக்கத்தில் 1930 ம் ஆண்டு மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் ஒன்று திரண்ட போதும் அனைவரையும் எதிர்த்து தென்னாட்டு சிங்கம் பசும்பொன் தேவர் உற்ற துணையோடு வென்றெடுத்தவர் தான் வங்கத்து சிங்கம் வைர நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுவாமி விவேகானந்தரின் வழித்தோன்றலாக உருவானவர்கள் தான் நேதாஜி பசும்பொன் தேவர் மாபெரும் தலைவர்கள் உருவாக்கிய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினை தங்களின் சுயநலத்திற்க்காக சில பயன்படுத்தி தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் அதிமுக,திமுக திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து கட்சியின் செல்வாக்கை இழந்து நிற்கின்றார்கள்,

1970 ஆண்டுகளில் ஐந்து முதல் பத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் மேலவை உறுப்பினர்ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திருந்த மாபெரும் அரசியல் இயக்கம் தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமிட்டது ஆனால் இன்றை தினத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியில் தற்போது தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வர முடியாத சூழல் இன்று தமிழகத்தில் இருக்கிறது

இதற்கு காரணம் தொடர்ந்து திராவிட கட்சிகள் கூட்டணியில் மாறி மாறி அங்கம் வகித்தது திராவிட கட்சிகளின் சூழ்ச்சியே காரணம் என கூறினார் இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்வர்ட் பிளாக் கட்சியினை காப்பாற்றுவோம் அதுபோல பசும்பொன் தேவர் முற்றும் துறந்த ஞானி, பிறவியிலே ஞானத்தை பெற்றவர் என்று சிறப்புரையாற்றினார்

சிந்தனை மன்றத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் ந.பசும்பொன் பாண்டியன் அரசியல் சமூக பணியை பாராட்டின பசும்பொன் தேவர் எழுச்சி நாயகன்விருதும்
கமுதி தாலுக மறவர் சங்க நிர்வாகிகளுக்கு பசும்பொன் தேவர் திருப்பணி நாயகர்கள்விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் துணைத்தலைவர் பழனிஇராமர் பார்வர்ட் பிளாக் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடாசலம் பேராசிரியர்கள் நீரா பொன்முத்து ஆதி மூலம்வாகை பாண்டியன் சண்முக மூர்த்திஆசிரியர் முத்துராமலிங்கம்தர்மர் கமலநாதன் போஸ்தேவர்உயர்மட்ட குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன்ஜாகிர் உசேன் சிந்தனை மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சோழவந்தான் ரமேஷ்ராஜபாண்டி தஞ்சாவூர் மேற்கொண்டார் மற்றும் பெரியோர்களும் சான்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் வருகை தந்துள்ள அனைவரையும் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் குடிக்கினியான் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *