செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் , கொளத்தூர் பெரவல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் புதியதாக பதவியேற்றார்.
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட புகாரில் முன்னாள் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மாற்றப்பட்டதை தொடர்ந்து.
கொளத்தூர் காவல் துணை ஆணையராக குமார் பதவியேற்றார். அவர் நம்மிடம் கூறும்போது ரவுடியிசம் ,கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அருகில் போதை தரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பொதுமக்கள் தங்கள் குறைகளையும், இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களையும் நேரடியாகயும் சொல்ல 94981-74483 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளார்.