தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா ஷுக்கள் ,காலணிகள் ஆகியவற்றை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் லெட்சுமி மற்றும் கருப்பையா ஆகியோர் வழங்கினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர்.