விருத்தாசலம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக பிரசித்தி பெற்ற பாலாம்பிகை விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் விருத்தாம்பிகை அம்மனுக்கு வருடம் தோறும் ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 19 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காலை மற்றும் இரவில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து

வந்த நிலையில் 27ந் தேதி தேரோட்டமும், நேற்று இரவு ஸ்படிக பல்லாக்கு நிகழ்ச்சியும் நடந்தது காலையில் அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் நடந்தது.

முன்னதாக உற்சவமூர்த்தி களான விநாயகர், வள்ளி தெய்வானை உடனுரை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுரை விருத்தகிரீஸ்வரர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருள, கெட்டி மேளங்கள் முழங்க ஆடிப்பூர திருக்கல்யாணம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை தூவி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலா மற்றும் அலுவலர்களுடன் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *