துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் கௌரி மஹாலில் 09/08/2025 அன்று துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை,என்.நடராஜன் நினைவு அறக்கட்டளை மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜி.சேதுபதி தலைமையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் செயலாளர் எஸ்.விவேகானந்தன்,பொருளாளர் டாக்டர் ஆர் விஜயகுமார்,சமூக சேவை இயக்குநர் எம்.பெருமாள் கண் சிகிச்சை முகாம் இயக்குநர் என்.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவர்கள் ஐஸ்வர்யா, குஷி, செவிலியர்கள் சிந்து, பவித்ரா, அபிராமி,தனு, மகாலட்சுமி,முகாம் அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கண் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.இதில் கிட்ட பார்வை, துரப்பார்வை, உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இம்முகாமில் சுமார் 250 நபர்கள் கலந்து கொண்டனர்.இதில் சுண்புரை மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு சுமார் 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முகாம் நாளன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோவை சங்கரா கண் மருத்துவமனைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதி, உணவு, இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை, மருந்துகள் ஐஒஎல் லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இம்முகாமில் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், திருமூர்த்தி, ஞானசேகரன்,சரவணன், ரமேஷ், லோகநாதன் மற்றும் புத்தனாம்பட்டி நேரு கல்லூரி ரோட்டராக்ட் மாணவிகள் அபிநயா ,விவேதா, சரண்யா, கிருபாளினி,கற்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்