குடந்தை மருதம் லயன்ஸ் கிளப் சார்பாக விஜயா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா கொடியேற்றி வைதது குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.பின்னர் முன்னாள் ராணுவத்தினர்கள் அழைக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து பரிசு பொருள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .மேலும் மேலக்காவேரி உள்ள காமராஜர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் பயிலும் மாணவர்களுக்கு 10 நாற்காலிகள் வழங்கப்பட்டது .

விழாவில் மருதம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக சாசன உறுப்பினர் தொழிலதிபர் சுகன்யா ஏஜென்சி உரிமையாளர் பேராசிரியர் இனிய நண்பர் லயன் தமிழ்ச்செல்வன்,ஆகியோருக்கு பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *