ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆலய வருடாந்திர கடைசி ஆடி வெள்ளி பொங்கல் முளைப்பாரி பால்குடம் உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இதில் பங்கேற்ற களைகள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றனர்
வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து கமுதி செல்லும் சாலையில் எல்கை தூரம் நிர்ணயிக்கப்பட்டு பெரிய மாடு சின்ன மாடு என பிரிவுகளாக இரண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது இதில் ராமநாதபுரம் தூத்துக்குடி விருதுநகர் சிவகங்கை மாவட்டம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு மாட்டு வண்டி பந்தய வீரர்கள் தங்களது காளைகளுடன் ஆர்வமுடன் பந்தயத்தில் பங்கேற்றனர்
முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் குத்துவிளக்கு பரிசாக வழங்கிய கவுரவிக்கப்பட்டது மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறப்படும் ஏராளமானோர் பார்வையாளர்கள் கண்டு ரசித்து சென்றனர்