காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்க கிராம மக்கள் கலெக்டர் மனு.

அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், குன்றத்தூர் ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம், இந்திய கம்யூனிஸ்ட், தந்தை பெரியார் திராவிட கழகம், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காஞ்சிபுரம் வந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலை சிமெண்டால் அமைந்துள்ளது.

இச்சிலை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது இச்சிலை சற்று இடம் நகர்த்தப்பட்டு முழுவுருவ வெண்கல சிலையாக நிறுவ நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு அமையும் புதிய வெண்கல சிலைக்கு செலவினங்களில் அனைத்து சமூக மக்களும் தங்கள் சார்பில் நிதி பங்களிப்பை அளிக்க விரும்புகின்றனர்.

இது தொடர்பாக நகராட்சி மற்று வருவாய் துறை அலுவலர்களை அணுகிய போது 08.07.2025 அன்று ஒரு அமைதி பேச்சுவார்தை ஏற்பாடு செய்தனர் அக்கூட்டத்தில் திருவுருவ சிலை நிறுவ அனைத்து சமூக மக்கள் நிதி பங்களிப்பை ஏற்க மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்து தகவல் தெரிவிப்பதாக கூறினர்.

மேலும் இதுநாள் வரை எந்த தகவல் தெரிவிக்கவில்லை எனவே மாவட்ட கலெக்டர் அனைத்து சமூக மக்களின் நிதி பங்களிப்பை ஏற்று விரைவில் இத்திருவுறுவ வெண்கல அமைய ஏற்பாடு செய்யுமாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *