கரூர் செய்தியாளர் மரியான்பாபு

பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்..

கரூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு-10,000- பேரை திரட்ட முடிவு செய்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர செயலாளர் ராக்கி முருகேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பசுபதி, முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கார்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி இந்த மாதத்தின் இறுதியில் நாமக்கல் மற்றும் கரூரில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் வீடுகள் தோறும் திண்ணை பிரச்சாரம் செய்து உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும் எனவும் நடைப்பயணம் நிகழ்ச்சியில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய இந்த கூட்டத்தில் முடிவுசெய்துள்ளதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *