பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது.

இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இடையே பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, மங்களூர், காளிக்கட், கொச்சி உள்ளிட்ட பல நகரங்களை கடந்து மொத்தம் 4600 கி.மீ. தூரம் பெண்கள் விழிப்புணர்வு செய்தியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, குளோபல் வேர்ல்ட் ரெகார்ட் எனும் பெருமையைப் பெற்றது.

இந்த சாதனைக்காக ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ் தலைவர் பிரினா பிரபாகரன், செயலாளர் இனிகோ கார்டோஸா, தூத்துக்குடி லெஜெண்ட் தலைவர் பிரேம் பிரபாகரன் மற்றும் செயலாளர் ஜினோ ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக வில்லியம் மருத்துவமனை இயக்குனர் சூசன் வில்லியம் அவர்கள் சாதனை படைத்த அணியினரை வாழ்த்தி, “பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை” என்று பாராட்டினார்.

மேலும், சாதனையாளர்கள், மண்டல பதினெட்டின் தலைவர் சரவணகுமார் அவர்கள் தொடர்ந்து வழங்கிய ஊக்கமும் வழிகாட்டுதலுமே இச்சாதனையை உருவாக்கக் காரணமாக இருந்தது என்று நன்றியுடன் குறிப்பிட்டனர்.

அத்துடன், மண்டலம் பதினெட்டின் முன்னாள் தலைவர் சிபி உரையாற்றி, சாதனையாளர்களின் முயற்சியை பாராட்டி, எதிர்காலத்திலும் பெண்கள் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் செயல்பட வேண்டும் என்று ஊக்குவித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தவப்புதல்வி அமைப்பின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, பேராசிரியர், பயோனியர் குமாரசுவாமி கல்லூரி, நாகர்கோவில் அவர்கள், “இச்சாதனை பெண்களின் திறமையை உலகளவில் வெளிப்படுத்தும் ஒரு முன்னோடி படியாகும்” என்று வலியுறுத்தி, வரவேற்பு நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

பெண்கள் கல்வி, சமூக முன்னேற்றம், தொழில்முனைவு, அதிகாரமளிப்பு ஆகிய அனைத்திலும் இந்த கார் ராலி ஒரு முன்னோடி உலகச் சாதனையாக பதிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *