திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் 23- ந்தேதி செவ்வாய்க்கிழமை முதல் கொழ அலங்காரம், தினசரி அம்பாள் ஒரு அலங்காரத்தில் காட்சி அளிப்பார், தினசரி இரவு 7- மணிக்கு சமய சொற்பொழிவுகள் நடைபெறும். அக்டோபர் 03- ந்தேதி வெள்ளிக்கிழமை வரை நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.
இவ்வாலயத்தில் நேற்று முதல் நாள் 23- ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6- மணிக்கு அம்பாள் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7- மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8- மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. முதல் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் தொழவூர் தெய்வத்திரு கணேச உடையார் குமாரர்கள் வலங்கைமான் கும்பகோணம் ரோடு ஜி.செல்வம், ஜி.செந்தில் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.