கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.


கமுதி அருகே பேரையூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், பேரையூர், ஆனையூர், புல்வாய்குளம், இலந்தைகுளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,ஒன்றிய துணைச் செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண பெருமாள், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், சரவணகுமார், தாரணிஅரசி, ராஜலெட்சுமி, ஊராட்சி செயலர்கள், குருசாமி, ராஜா, தவசிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், விவசாயத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் மனுக்கள் 1015 பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *