போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவமனை முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறுப்பு முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எம் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர் நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன் மேலாளர் ஜமாலுதீன் சுதாகர அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் போடி நகர பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயன் பெற்றனர் இந்த முகாமில் நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி சபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *