உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஈஸ்வர செட்டிபாளையம் சடையபாளையம் கிராம ஊராட்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

குண்டடம் ஈஸ்வர செட்டிபாளையம் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முகம் பெறப்பட்டது. இம்முகம் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இம் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த முகாமில் 609 பேர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.இந்த மனுக்கள் மீது ஊறிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ். குண்டடம் மேற்குஒன்றிய கழகசெயலாளர் எஸ். சந்திரசேகரன் சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் . ஈஸ்வரன். குண்டடம் பகுதியை சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இநாள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *