தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் அவரது செய்திகுறிப்பில் கூறியவாறு;-
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பிரபல தனியார்துறை நிறுவனமான ராமசந்திரன் நீடைல் பிரைவெட் லிமிடெட் நிறுவத்திற்கென சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் தென்காசி இணைந்து 20.01:1023 அன்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், தென்காசியில் வைத்து நடைபெற வுள்ளது.
இந்நிறுவனத்தில் அதிக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்து கல்வித்தகுதிகளும் பல்வேறு நிலைகளில் பணிபுரிய தேவைப் படுகின்றனர். இடம் உணவு, வாகன வசதி இலவசம். ES, PF மற்றும் திறமைக் கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்.
மேற்காணும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று. ஆதார் கார்டு. பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.