திருவள்ளூர்

பழவேற்காடு அருள்மிகு அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலய பால் குடை விழாநடைப் பெற்றது. இதில் நூற்றுக்கு மேற் பட்ட பெண்கள். பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பழவேற்காடு பகுதி இந்த பகுதியில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலயம் உள்ளது இக்கோவிலானது உத்தமர் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப் படுகிறது.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், தேய்பிறை, அஷ்டமி, பௌர்ணமி, மகா சிவராத்திரி, உள்ளிட்ட நாட்க ளிலும் மற்றும் வருடம் தோறும் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற் றுக்கிழமைகளும் ஏராளமான பக்தர்கள் வந்து தாங்கள் வேண்டி வந்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். மேலும் வருடம் தோறும் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் சுற்று பகுதியைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அவ்வாறு நேற்று சுமார் 100க்கு மேற்பட்ட பெண்கள் அதே பகுதி யில் உள்ள காளியம்மாள் கோவில் இருந்து ஊர்வலமாக பால்குடம் ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஆலய நிர்வாகிகளான முரளி கிருஷ்ணன், முத்துக்குமார், டி எல் சி ரவி, சாந்தி, கங்காதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

தற்போது அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலயம், மற்றும் காளி காம்பாள் கோவில் புதுப்பிப் பதற் காக இந்து அறநிலை துறை சார் பில் சுமார் 2.62 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *