திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சாந்தியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மெதிப்பாளையம் வள்ளியம்மாள் பழனி தலைமை யிலும் தேர்வழி ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா ஆகியோர் முன்னிலையில் 10க்கு மேற்பட்ட தலைவர்கள் கும்பலாக வந்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.
ஊராட்சி ஒன்றியம் ஆணையர் அலுவலகம் சார்பில் ஊராட்சி களின் நடைபெறும் பணிகளுக்கு ஊராட்சி ஒப்புதல் பெற வேண்டும், ஒன்றிய சாலைகள் அல்லாத சாலைகள் ஊராட்சி சார்பில் ஒப்புதல் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து கோரிக்கை மனுவில் கூறப்பட்டு ள்ளது. பின்னர் முடிவில் ஆணை யாளர் அலுவலகம் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கா வில்லையேனில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து ஆட்சியர் அலுவலக முன்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது என ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தால் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலு வலகம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.