தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்

ஏலகிரி மலையில் உள்ள குப்பைகள் அகற்ற ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு பள்ளி மற்றும் அரசு விடுதியை ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். விடுதிக்கு தேவையான மின் விசிறி, மின் விளக்கு மற்றும் மாணர்களுக்கு தேவையான மெத்தை கட்டில் என அனைத்தையும் வழங்க உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அரசு பள்ளி மற்றும் விடுதிக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மலைகளில் சேரும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் அனைத்தும் சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

வாரத்திற்கு ஒரு முறை நானே நேரில் ஆய்வு மேற் கொள்கிறேன் என்றார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் திட்ட இயக்குனர் செல்வராசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *