கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதுமார்க்கெட் பகுதியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர் அப்போது அப்பகுதியிலுள்ள சிதிலமடைந்த கால்வாய் மற்றும் பல்வேறு பகுதிகளையும் நகராட்சி அதிகாரிகளுடன் பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்